மருமகளை தாக்கிய மாமியார் கைது


மருமகளை தாக்கிய மாமியார் கைது
x

வந்தவாசி அருகே மருமகளை தாக்கிய மாமியார் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 25). இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி அன்று தமிழரசியை மகேஷ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசி தெள்ளார் போலீசில் புகார் கொடுக்க சென்றார்.

அப்போது அங்கு சென்ற மகேஷ்குமாரின் சித்தப்பா தயாளனின் மனைவி அமுதா என்பவர் போலீஸ் நிலையத்தக்கு செல்லகூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கையை பிடித்து அமுதா இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் வளையல் உடைந்து ரத்த காயம் ஏற்பட்டதுடன் தமிழரசி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த தழிழரசி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழரசி தெள்ளார் போலீசில் நேற்று புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story