திருவள்ளூர் அருகே குழந்தையை கொன்ற தாய்


திருவள்ளூர் அருகே குழந்தையை கொன்ற தாய்
x

திருவள்ளூர் அருகே குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளுர்,

திருவள்ளூரை அடுத்த கொசவன்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே நேற்று காலை சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது குழிக்குள் பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவள்ளூர் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் இருந்து தொப்புள் கொடியுடன் முகத்தில் சிறு சிறு ரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆண் குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அதே பகுதியை லதா என்பவரின் குழந்தை என்பது தெரியவந்தது. 2 குழந்தைகளுடன் வசித்து வந்த லதாவின் கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து லதாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் அவர் கர்ப்பமாகி குழந்தையை பெற்று சுடுகாடு அருகில் உள்ள சுமார் 10 அடி குழியில் போட்டு மண் கட்டிகளை குழந்தையின் மேலே போட்டு கொலை செய்துள்ளார்.

இதையடுத்து லதாவை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து கள்ளக்காதலன் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story