2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை


2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள முத்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக். சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி நதியா (வயது 31). இவர்களுக்கு சஸ்விகா (7) என்ற மகளும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

பி.டெக். முடித்த நதியா, ஐதராபாத்தில் வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பின் அவர் வேலைக்கு செல்லவில்லை.

நன்றாக படித்தும் வேலைக்கு போக முடியவில்லையே என்ற விரக்தியில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நதியா விஷம் குடித்து வாந்தி எடுத்துள்ளார்.

இது குறித்து அவரது மாமியார் கேட்டபோது விஷம் குடித்த தகவலை நதியா கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள் உதவியுடன் நதியாவை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நதியாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை ேமற்கொண்டு வருகின்றனர்.

2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story