மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்


தஞ்சையை அடுத்த ராவுசாப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). சம்பவத்தன்று இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அப்போது மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தஞ்சை பழைய பஸ்நிலையம் அருகே ரமேஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தன்னுடைய மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டிவந்தார். அவரை பிடித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சை அழகிகுளம் பகுதியை சேர்ந்த சபிஅகமது (22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து சபி அகமது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story