சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி உள்பட 2 பேர் காயம்


சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி உள்பட 2 பேர் காயம்
x

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

மாயனூர் அடுத்த கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40), தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் மகன் அகிலேசுடன் (15) கடந்த 19-ந் தேதி மாயனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்றுக்கொண்டு இருந்த சரக்கு வேன் திடீரென பிரேக் போட்டதால் சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி, அகிலேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story