மோட்டார் சைக்கிள் மோதி மின்ஊழியர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி மின்ஊழியர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி மின்ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா கரிக்கலாம்பாடி கிராமம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர், மங்கலம் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மங்கலம் புதூர் பகுதியில் அவலூர்பேட்டை -திருவண்ணாமலை சாலையை பாலாஜி கடக்க முயன்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story