மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Oct 2023 9:30 PM GMT (Updated: 2 Oct 2023 9:30 PM GMT)

கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலியானார்.

நீலகிரி

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் நீர்கண்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 23), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது பணியை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சோலூர்மட்டம்-நீர்கண்டி சாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து சோலூர்மட்டம் சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story