மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

விக்கிரமசிங்கபுரம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

கருத்தப்பிள்ளையூர் பூவன்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் மாரியப்பன் (வயது 22). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியார்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் ஆம்பூர் ரோட்டில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story