மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36), லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாமியார்மடத்துக்கு வந்தார். பின்னர், அங்குள்ள பழைய மின்வாரிய அலுவலகத்தில் முன்புறம் மோட்டார் சைக்கிளை வைத்துவிட்டு பஸ்சில் திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். நேற்று காலையில் சாமியார்மடத்துக்கு வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story