மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருட்டு
கன்னியாகுமரி
குழித்துறை:
மார்த்தாண்டம் கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 47). இவர் வெட்டுமணியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். மதியம் வீட்டிற்கு சாப்பிட செல்வதற்காக வெளியே வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story