மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:45 PM GMT)

மோட்டார் சைக்கிள் திருட்டு

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள கல்லுதொட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் ஜெனிஸ் (வயது26), பட்டதாரி. இவர் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள ஒரு வங்கித்தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜெனிஸ் தனது மோட்டார் சைக்கிளில் பம்மம் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். பின்னர், அந்த மார்க்கெட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பயிச்சி மையத்துக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெனிஸ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story