மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

தேங்காப்பட்டணத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி

புதுக்கடை:

தேங்காப்பட்டணத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேங்காப்பட்டணம் பீச்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவருடைய மகன் ஈசா (வயது 23), டிரைவர். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றபோது தனது மோட்டார் சைக்கிளை தேங்காப்பட்டணம் ஆற்றுப்பள்ளி தெருவில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றாா். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஈசா புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி மா்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story