மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

பாளையங்கோட்டையில் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சுடலைகோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் சுப்பையா (வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாா். இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பையா பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story