மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:46 PM GMT)

கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடு போனது.

கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள புதுவண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானமூர்த்தி மகன் சபரிநாதன் (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டில் அவரது மோட்டர் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story