மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு

கன்னியாகுமரி

கருங்கல்:

அம்பாசமுத்திரம் ஜமீன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வானமாமலை. இவருடைய மகன் சட்டநாதன் (வயது 26). இவர் கருங்கல் அருகே எட்டணி பகுதியில் உள்ள வறுவேல் என்பவரது வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி சட்டநாதன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story