மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:28 AM GMT)

மோட்டார் சைக்கிள் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கிருபாநகரை சேர்ந்தவர் ஏசுராஜன் (வயது 43). இவர் சம்பவத்தன்று முன்னீர்பள்ளம் அருகே ஜோதிபுரத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஏசுராஜன் கொடுத்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story