மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

முக்கூடலில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
முக்கூடல்:
முக்கூடல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட முக்கூடல் பூவையா தெருவை சேர்ந்தவர் முத்து விக்னேஷ் (வயது 31). இவர் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 11-ந் தேதி அன்று வீட்டிற்கு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்தபோது அது திருட்டு போய் இருந்தது. இதுபற்றி முத்து விக்னேஷ் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக பெருமாள் விசாரணை நடத்தி சிங்கம்பாறையை சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் (20) என்பவரை கைது செய்தார். மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





