மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
x

முக்கூடலில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட முக்கூடல் பூவையா தெருவை சேர்ந்தவர் முத்து விக்னேஷ் (வயது 31). இவர் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 11-ந் தேதி அன்று வீட்டிற்கு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்தபோது அது திருட்டு போய் இருந்தது. இதுபற்றி முத்து விக்னேஷ் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக பெருமாள் விசாரணை நடத்தி சிங்கம்பாறையை சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் (20) என்பவரை கைது செய்தார். மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.


Next Story