படப்பை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


படப்பை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

படப்பை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செனறு கொண்டிருந்தனர். பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

இவர்கள் வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வளைவில் திரும்பிய போது ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சாலமங்கலம் பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார் (25) சென்று கொண்டிருந்தார். இவரது மோட்டார் சைக்கிள் பாலசுப்பிரமணியன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும் அஸ்வின் குமாரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

விக்னேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story