மோட்டார் சைக்கிள்கள் மோதல்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்
x
தினத்தந்தி 15 March 2023 7:00 PM GMT (Updated: 15 March 2023 7:01 PM GMT)

தேனியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

அல்லிநகரம் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 20). இவர், அவரது நண்பர் சந்தோஷ்குமார் (15), ஈஸ்வரன் (16) ஆகியோருடன் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ரத்னா நகரில் இருந்து அல்லிநகரம் நோக்கி வந்தனர். அப்போது அவர்கள் பெரியகுளம்-தேனி ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே சாலையை கடப்பதற்காக நின்றனர். அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது அல்லிநகரத்தை சேர்ந்த விஷால் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஹரிகரன், சந்தோஷ்குமார், ஈஸ்வரன் ஆகிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story