மோட்டார்சைக்கிள்கள் மோதல்; சிறுமி பலி


மோட்டார்சைக்கிள்கள் மோதல்; சிறுமி பலி
x

கணியம்பாடியில் மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானாள்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா (35). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். சங்கர் கடந்த 29-ந் தேதி இரவு தனது மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக 3-வது மகள் பூஜாவுடன் (12) சென்றார். கணியம்பாடி பெட்ரோல் பங்க் எதிரே சாலையை கடக்க முயன்ற போது, வேலூரில் இருந்து கணியம்பாடி நோக்கி வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள், சங்கர் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூஜா நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story