கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 27 Nov 2022 6:45 PM GMT (Updated: 27 Nov 2022 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலையோரங்களில் வசிப்போர் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருவதை காண முடிந்தது

விழுப்புரம்

விழுப்புரம்

கடும் பனிப்பொழிவு

கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு இருப்பது வழக்கம். இதில் மார்கழி மாதத்தில் தான் அதிக பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே கடும் பனிப்பொழிவு இருப்பதை காண முடிகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. மாலை 5 மணிக்கு பிறகு தொடங்கும் பனிப்பொழிவின் வேகம் நேரம் செல்ல செல்ல அதிகரித்து மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது.

வாகன ஓட்டிகள் அவதி

முக்கிய சாலையான சென்னை-திருச்சி, விழுப்புரம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பிரதான சாலைகளில் அதிகாலை வேளையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சீரான வேகத்தில் செல்வதை காண முடிகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பனிப்பொழிவினால் ஏற்படும் கடும் குளிரை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்வோரின் கூட்டமும் சற்று குறைந்துள்ளது. சிறு வியாபாரிகள், பாதசாரிகள் சிலர் சுவெட்டர், மப்லர் ஆகியவற்றை அணிந்து சென்றனர். இரவு நேரங்களில் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் சாலையோரங்களில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.


Next Story