133 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்


133 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
x

தொடர்மழை எதிரொலியாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியை எட்டியது.

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 132.20 அடியாக இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அதன்படி அணையின் நீர்மட்டம் 133.60 அடியாக நேற்று உயர்ந்துள்ளது. வினாடிக்கு, 1,604 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

பெரியாறு-2, தேக்கடி-1.8, கூடலூர்-1.2, உத்தமபாளையம்-2.6, வீரபாண்டி-5.2, வைகை-0.2, சோத்துப்பாறை-5, ஆண்டிப்பட்டி-3.2, போடி-4.2, பெரியகுளம்-2 மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story