செங்கோட்டை நகரசபை கூட்டம்


செங்கோட்டை நகரசபை கூட்டம்
x

செங்கோட்டை நகரசபை கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகரசபை அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. நகரசபை தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் இளவரசன், மேலாளா் கண்ணன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், செங்கோட்டை நகராட்சி வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தையில் மேம்பாட்டு பணிகள் தொடர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனைத்து உறுப்பினா்களும் வலியுறுத்தினா்.

மேலும் கழிவுநீர் ஓடையை சீர்செய்தல், சாலைகளை சீரமைத்தல், சீராக குடிநீர் வழங்கல், தெருவிளக்கு வசதிகள் செய்து தரக்கோரி உறுப்பினர்கள் பேசினா். முடிவில் மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ராமலட்சுமி உறுதியளித்தார்.

-------------


Next Story