திருச்செங்கோட்டில் வாலிபரை அடித்துக்கொன்று உடல் குட்டையில் வீச்சுபோலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண்


திருச்செங்கோட்டில் வாலிபரை அடித்துக்கொன்று உடல் குட்டையில் வீச்சுபோலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண்
x
தினத்தந்தி 3 July 2023 7:00 PM GMT (Updated: 4 July 2023 5:44 AM GMT)

திருச்செங்கோட்டில்வாலிபரை அடித்துக்கொன்று உடல் குட்டையில் வீச்சுபோலீஸ் நிலையத்தில் 5 பேர் சரணடைந்தனர்.

நாமக்கல்

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் வாலிபர் அடித்து கொல்லப்பட்டு உடல் குட்டையில் வீசப்பட்டது தொடர்பாக 5 பேர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அடித்துக்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலையடிகுட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மலைசுத்தி ரோடு மலார்குட்டை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதையில் ராஜசேகரனுக்கும், நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜசேகரன் மீது முன்விரோதத்தில் இருந்த நண்பர்கள் அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலில் கல்லை கட்டி மலார்குட்டையில் வீசி சென்றனர்.

இதையடுத்து நேற்று இந்த கொலை தொடர்பாக மலார்குட்டை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25), பூவரசன் (23), பிரவீன்ராஜ் (27) விக்னேஷ் (27), பெரியசாமி (25) ஆகியோர் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொலை வழக்குப்பதிவு செய்தார்.

விசாரணை

இதுகுறித்து அவர்கள் அளித்த தகவல்படி திருச்செங்கோடு தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மலார்குட்டையில் கல்லை கட்டி வீசப்பட்ட ராஜசேகரன் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் ராஜசேகரனின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்துக்கு நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் சென்று விசாரணை நடத்தினார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜசேகரனுக்கும், சிலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சிலை வைப்பதில் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. எனினும் முன்விரோதத்தில் கொலை நடந்ததா? கொடுக்கல் வாங்கலா? பெண் பிரச்சினையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story