தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை


தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை
x

தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் முகம் அடையாளம் தெரியாத நிலையில் வாயில் துணியை கட்டி பாறாங்கல்லை தலையில் தூக்கி போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் துைண சூப்பிரண்டு காந்தி தலைமையில் பரமக்குடி தாலுகா போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த வரை பார்த்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்தவர் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் காலனி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் யார்?. எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story