ஓசூர் அருகேவிவசாயி கத்தியால் குத்திக்கொலை


ஓசூர் அருகேவிவசாயி கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 26 Jan 2023 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 52). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ராமசந்திரம் பகுதியில் உள்ள உறவினர் நிலத்தில் கிருஷ்ணப்பா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ேபாலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த கிருஷ்ணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

கொலையுண்ட கிருஷ்ணப்பாவின் உடலில் 5 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கிருஷ்ணப்பாவிற்கு யாருடனும் முன்விரோதம் இருந்ததா? தொழில் போட்டி இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக அவருடைய உறவினரான அப்பையா என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் அருகே விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story