கம்பன் கலை இலக்கிய மன்றம் சார்பில் முத்தமிழ் விழா


கம்பன் கலை இலக்கிய மன்றம் சார்பில் முத்தமிழ் விழா
x

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கம்பன் கலை இலக்கிய மன்றம் சார்பில் முத்தமிழ் விழா

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கம்பன் கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் முத்தமிழ் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, தமிழ் ஆசிரியர்கள் பிரகாஷ், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ் வரவேற்றார்.

இதில் செங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி விலங்கியல் ஆசிரியர் தமிழரசன், செய்யாறு அறிஞர் அண்ணா கலை கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆறுமுகம், பூபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் குறித்து உரையாற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பிரகாஷ், விஜயலட்சுமி, அரசு, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story