விளாத்திகுளம் அருகே 15 ஆடுகள் மர்ம சாவு


விளாத்திகுளம் அருகே 15 ஆடுகள் மர்ம சாவு
x

விளாத்திகுளம் அருகே, 15 ஆடுகள் மர்மமான முறையில் செத்தன

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே, 15 ஆடுகள் மர்மமான முறையில் செத்தன.

ஆடுகள் மர்ம சாவு

விளாத்திகுளம் அருகே பூசனூர் கிராமத்தை சேர்ந்த முனியசாமி-சுப்புலட்சுமி தம்பதியினர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் முனியசாமி ஆடுகளை மேய்ப்பதற்கு முன்பு தெருவில் உள்ளவர்களிடம் பழைய உணவு கஞ்சிகளை வாங்கி ஆடுகளுக்கு குடிப்பதற்காக வைத்துள்ளார்.

பின்னர் ஊரில் உள்ள கண்மாய் கரையில் ஒவ்வொன்றாக வாயில் நுரை தள்ளியபடி, வயிறு வீங்கி நிலையில் மர்மமான முறையில் செத்து கிடந்தது. இவ்வாறு 15 ஆடுகள் இறந்து கிடந்தன.

விளாத்திகுளம் அருகே

15 ஆடுகள் மர்ம சாவு

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முனியசாமி-சுப்புலட்சுமி தம்பதியினர், குளத்தூர் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கால்நடை ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர்கள் ஆடுகளின் உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்று பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனையின் முடிவு வந்த பின்னர் தான் ஆடுகள் எதனால் இறந்தது? என தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story