மீனவப் பெண் படுகொலை: நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!


மீனவப் பெண் படுகொலை: நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
x

மீனவ பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி நாம் தமிழர் கட்சியினர் கையை நீட்டி வீரவணக்கம் செலுத்தினர்

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம், வடகாடு கிராமத்தில் இருந்து கடலில் பாசி சேகரித்து விட்டு வந்த மீனவப் பெண்ணை அங்குள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் ரஞ்சன்ராணா, பிரகாஷ் என்ற இரண்டு வடமாநில தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஒடிசா மாநில தொழிலாளர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வரும் வடமாநிலத் தொழிலாளர்களின் அனைத்து விவரங்களையும் கணக்கெடுத்து தொடர்ந்து வடமாநிலத் தொழிலாளர்களை காவல்துறை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நின்று நாம் தமிழர் கட்சியினர் இதுவரை தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்துபோன பெண்களின் பெயர்களை நீண்ட துணியில் எழுதி அதை கையில் ஏந்தியபடி இறந்துபோன மீனவ பெண்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து மீனவப் பெண்ணை படுகொலை செய்த வட மாநிலத் தொழிலாளர்களை கண்டித்து கோஷமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கண் இளங்கோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story