நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 6 பேர் பத்திரமாக மீட்பு


நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள்   6 பேர் பத்திரமாக மீட்பு
x

நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 6 பேர் பத்திரமாக மீட்பு

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

கோடியக்கரையில் கடல் சீற்றத்தால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 6 பேரை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

படகு தலைகுப்புற கவிழ்ந்தது

நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப்(வயது 32) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பிரதீப், ராம்குமார்(18), ராமலிங்கம்(37), கிருஷ்ணராஜ்(40), சுப்ஹால்(52), ராஜேந்திரா(60) ஆகிய 6 மீனவர்கள் ஒரு பைபர் படகில் நேற்று முன்தினம் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கோடியக்கரை அருகே தென்கிழக்கில் இந்திய கடல் எல்லைப்பகுதியில் நள்ளிரவில் வலைகள் விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கடல் சீற்றத்தால் படகு திடீரென தலைப்புற கவிழ்ந்தது.

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்

இதை சற்றும் எதிர்பாராத மீனவர்கள் கடலுக்குள் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அருகில் உள்ள படகுகளின் உதவியையும் கேட்டு கூச்சலிட்டனர்.

இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் அவர்களை பார்த்து அருகில் விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

ஒப்படைப்பு

பின்னர் கடற்படையின் ரோந்து கப்பலில் 6 மீனவர்களை அழைத்துக் கொண்டு வந்து நாகை மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பிறகு நம்பியார் நகர் மீனவ பஞ்சாயத்தார்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story