கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை


கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2023 7:00 PM GMT (Updated: 14 Aug 2023 7:00 PM GMT)
நாமக்கல்

கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 2 மி.மீட்டரும், நாளை (புதன்கிழமை) 3 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 1 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு முறையே 12, 10 மற்றும் 14 கி.மீ.வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

வெள்ளை கழிச்சல் நோய்

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நோயின் அறிகுறிகள் கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்ந்து கொள்ளுதல், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து இறப்பு ஏற்படும். பொதுவாக நாட்டு கோழி வளர்ப்பு விவசாயிகள், வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும்.

மேலும் வெள்ளைக்கழிச்சல் நோய் நாட்டுக்கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன் மூலிகை மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story