நாமக்கல்லில் இருந்து திருப்பூருக்கு 250 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன


நாமக்கல்லில் இருந்து திருப்பூருக்கு 250 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 27 Jun 2023 12:30 AM IST (Updated: 27 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையில் கலெக்டர் உமா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டார்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு 250 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பப்பட உள்ளன. இவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார். இதை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு தேவையான 250 கட்டுப்பாட்டு கருவிகளும் திருப்பூர் மாவட்டத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், தனி தாசில்தார் (தேர்தல்கள்) திருமுருகன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story