சிதம்பரம் அண்ணாமலை நகரில் 'நம்ம ஸ்ட்ரீட்' விழிப்புணர்வு நிகழ்ச்சி; 24-ந் தேதி நடக்கிறது


சிதம்பரம் அண்ணாமலை நகரில்       நம்ம ஸ்ட்ரீட் விழிப்புணர்வு நிகழ்ச்சி;     24-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

சிதம்பரம் அண்ணாமலை நகரில் ‘நம்ம ஸ்ட்ரீட்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

கடலூர்

சிதம்பரம்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ' நம்ம ஸ்ட்ரீட் ' விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் பங்களா ரோட்டில் நடக்கிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். எனவே மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். மேலும் கடலூர் மாவட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story