நாராயணசுவாமி கோவில் திருவிழா

களக்காடு அருகே நாராயணசுவாமி கோவில் திருவிழா நடந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதை முன்னிட்டு முட்டப்பதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணிவிடைகளும் நடத்தப்பட்டது. பூச்சிறப்பு, வாணவேடிக்கை, உச்சிப்படிப்பு உள்ளிட்டவைகளும் நடந்தது. அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





