திண்டிவனத்தில் போதை ஊசி, மாத்திரை விற்பனை மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேர் கைது


திண்டிவனத்தில் போதை ஊசி, மாத்திரை விற்பனை    மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2022 6:45 PM GMT (Updated: 5 Oct 2022 6:46 PM GMT)

திண்டிவனத்தில் போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்த மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனத்தில் போதை ஊசிகள், போதை மாத்திரைகள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில், செயலி( ஆப்) ஒன்றை தொடங்கி அதன் மூலம் போதை மருந்துகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 2-ந்தேதி 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில், திண்டிவனம் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 32), வசந்தபுரம் பகுதி தினேஷ் (32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் மருந்து விற்பனை பிரதிநிதியாக (மெடிக்கல் ரெப்) இருந்து வரும் விஜயகுமார், செயலியில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை வழங்கி வந்துள்ளார். அவர் மருந்து விற்பனை பிரதிநிதி என்பதால், அதன் கீழ் செயல்பட்டு எளிதில் இதுபோன்ற போதை மருந்துகளை வினியோகித்து வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமார், அவருக்கு உதவியாக செயல்பட்ட தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story