தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெறுகிறது


தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெறுகிறது
x

தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெறுகிறது.

பெரம்பலூர்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளையும் சமரசம் செய்து முடித்துக்கொள்வதற்கான தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்களது சொத்து வழக்குகள், வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) ஆகிய வழக்குகளில் சமரச தீர்வு காணலாம். இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் சார்பில் வழக்குகளில் தீர்வுகள் காணப்படுவதால் இருதரப்பினருக்கான நீதிமன்ற கட்டணமாக செலுத்தப்பட்ட முழு தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம். இருதரப்பினருக்கும் வெற்றி-தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகலை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே, பொதுமக்கள், வழக்காடிகள் இன்று நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது சம்பந்தமாக, தினந்தோறும் சமரச பேச்சுவார்த்தை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற தொலைபேசியின் மூலமோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story