சைலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

கலவை அருகே உள்ள சைலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேச்சேரி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத சைலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி முதல் நாளான நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மூலவர் காமாட்சி அம்மனுக்கு பல வித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக் காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





