அரியலூரில் நவராத்திரி விழா தொடக்கம்

அரியலூரில் நவராத்திரி விழா தொடங்கியது.
அரியலூர் மாவட்டத்தில் நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி ஆலந்துறையார் கோவிலில் தபஸ்காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அரியலூர் கோதண்டராமசாமி கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஆராதனை செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





