புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு திருவிழா


தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு திருவிழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

நவராத்திரி

திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்டது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமய புலவர்களால் பாட பெற்ற புண்ணிய தலமாகும். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் இக்கோவிலில் நடைபெற்றது. இக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலுமண்டபத்தில் கொலு வைக்கப்பட்டது.

சிறப்பு அலங்காரம்

கொலு மண்டபத்திற்கு சவுந்திரநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story