போடி அருகேசரக்குவேன் மோதி முதியவர் படுகாயம்

போடி அருகே சரக்குவேன் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 57). நேற்று முன்தினம் மாலை இவர், போடி-தேவாரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்குவேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மதுரையை சேர்ந்த சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரான பாலமுருகன் (50) என்பவர் மீது போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





