கூடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு


கூடலூர் அருகே  நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு:  கலெக்டர் ஆய்வு
x

கூடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிைய கலெக்டர் ஆய்வு செய்தார்

தேனி

கூடலூரில் வெட்டுக்காடு, கப்பா மடை, தாமரைகுளம், ஒட்டாண்குளம், பாரவந்தான், பி.டி.ஆர்.வட்டம், ஒழுகு வழி சாலை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கடந்த சில ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடங்களில் கொள்முதல் நிலையம் அமைத்து அங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர். இந்த இடங்கள் விவசாய பணிகளுக்கு போதுமானதாக இல்லை. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. விற்பனை செய்த நெல் மூட்டைகளை தார் பாய்கள் மூலம் மூடி வைக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதனால் கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வாளர் மாளிகை வளாகம் பகுதியில் இன்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில், உத்தமபாளையம் ஆர். டி.ஓ. கவுசல்யா, உணவுப்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார், தாசில்தார் அர்ச்சுனன், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story