கூடலூர் அருகே கதம்ப வண்டு கடித்து பெண் சாவு


கூடலூர் அருகே கதம்ப வண்டு கடித்து பெண் சாவு
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 11:52 AM GMT)

கூடலூர் அருகே கதம்ப வண்டு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.

தேனி

கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி நல்லம்மாள் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர், லோயர்கேம்ப் அருகே உள்ள வைரவன் வாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்து கதம்ப வண்டு ஒன்று பறந்து வந்தது. அந்த வண்டு எதிர்பாராதவிதமாக நல்லம்மாளை கடித்தது.

இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கூலி வேலைக்கு சென்றபோது கதம்ப வண்டு கடித்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story