கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி பெண் பலி யார் அவர்? போலீசார் விசாரணை


கண்டாச்சிபுரம் அருகே  கார் மோதி பெண் பலி  யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:45 PM GMT)

கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி பெண் உயிாிழந்தாா். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிபுரம்

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று, அந்த பெண் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து இறந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story