நெய்வேலி அருகேகார் மோதி கொத்தனார் பலி


நெய்வேலி அருகேகார் மோதி கொத்தனார் பலி
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:46 PM GMT)

நெய்வேலி அருகே கார் மோதி கொத்தனார் உயிரிழந்தார்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள வடலூர் ஆபத்தாரணபுரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ஜெகநாதன் மகன் முருகன்(வயது 45). கொத்தனாரான இவர், நேற்று காலை மோட்டார் சைக்கிளில் நெய்வேலி ஆர்ச்கேட் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்குத்து மேற்கு பகுதி மயானம் எதிரே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story