பெண்ணாடம் அருகேபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது


பெண்ணாடம் அருகேபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:46 PM GMT)

பெண்ணாடம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்,

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே நரசிங்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் நரசிங்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையை சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக 2½ கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான அரிகேரி கிராமத்தை சேர்ந்த தனக்கோடி மகன் சங்கர் (வயது 40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story