பெருந்துறை அருகேசூரிய கிரகணத்தின்போது தரையில் செங்குத்தாக நின்ற உலக்கை


பெருந்துறை அருகேசூரிய கிரகணத்தின்போது தரையில் செங்குத்தாக நின்ற உலக்கை
x

பெருந்துறை அருகே சூரிய கிரகணத்தின்போது தரையில் உலக்கை செங்குத்தாக நின்றது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே பவானி ரோட்டில் உள்ள வாவிக்கடை பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. பா.ஜ.க. பிரமுகரான இவர் நேற்று இரவு 8.45 மணிஅளவில் சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது தனது வீட்டு வளாகத்தில் உள்ள மண்தரையில் உலக்கையை நிறுத்தினார். அது ஆடாமல் அசையாமல் எவ்வித பிடிப்புமின்றி செங்குத்தாக நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலர் அங்கு சென்று ஆர்வத்துடன் பார்த்தனர்.


Next Story