புஞ்சைபுளியம்பட்டி அருகே கண்காணிப்பு கேமரா கடையில் திருட்டு


புஞ்சைபுளியம்பட்டி அருகே கண்காணிப்பு கேமரா கடையில் திருட்டு
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே கண்காணிப்பு கேமரா கடையில் திருட்டு போனது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மல்லியம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார். (வயது 43).

இவர் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் கண்காணிப்பு கேமரா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 22-ந் தேதி இரவு ெஜயக்குமாரின் கடையில் வேலைப்பார்க்கும் வாலிபர், ஷட்டரை திறந்துவைத்துவிட்டு தூங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கடையில் இருந்த சில உபகரணங்களை காணவில்லை. இதனால் ெஜயக்குமார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார் . அப்போது 22-ந் தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் திறந்திருந்த கடைக்குள் நுழைந்து உபகரணங்களை திருடி செல்வது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story