சத்தியமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


சத்தியமங்கலம் அருகே  கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி ஆனார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி ஆனார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவர்

சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி சரோஜா. கூலித்தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் பாரதி (வயது 19). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.எம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று சத்தியமங்கலத்தை அடுத்த பாச்சாமல்லனூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றார்.

கிணற்றில் மூழ்கி சாவு

பின்னர் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு நண்பர் ஒருவருடன் குளிக்க சென்றார். பாரதிக்கு நீச்சல் தெரியாததால் குளிப்பதற்காக கிணற்றில் இறங்கியவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டதும் பாரதியுடன் வந்த நண்பர் சத்தம்போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கிணற்றில் குதித்து பாரதியை தேடினர். அவர்களால் பாரதியை மீட்க முடியவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாரதியின் உடலை மீட்டு கிணற்றுக்கு மேலே எடுத்து வந்தனர். அவருடைய உடலை கண்டதும் பாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story