தேனி அருகேமூதாட்டி மீது தாக்குதல்

தேனி அருகே மூதாட்டியை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்த நடராஜன் மனைவி கருப்பாயி (வயது 71). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மகாராஜன் என்பவருக்கும் பாதை பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், கருப்பாயியை மகாராஜன், அவருடைய மனைவி ரஞ்சனி ஆகியோர் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில், மகாராஜன், ரஞ்சனி ஆகிய 2 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





