தேனி அருகே ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி


தேனி அருகே  ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
x

தேனி அருகே ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்

தேனி

தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). ஆட்டோ டிரைவர். நேற்று இவர் தனது நண்பர்களுடன் வீரபாண்டி கண்ணீஸ்வரர் உடையார் கோவில் அருகில் முல்லைப்பெரியாற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார். இதையடுத்து அவருடைய நண்பர்கள் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும், தேனி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து லட்சுமணன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவருடைய உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட அவருடைய உடல் தேனியை அடுத்த அரண்மனைபுதூர் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய மனைவி ஆதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story